காஃப்கா நுண்மொழி-39
காஃப்கா நுண்மொழி -39 “ தீமைக்கான விலையை ஒருவன் அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருக்க முடியாது . ஆனாலும் அவன் தொடர்ந்து முயன்று கொண்டேதான் இருக்கிறான் . மாவீரன் அலெக்சாண்டர் தன்னுடைய இளமைக்கால வெற்றிகள், அவன் உருவாக்கிய பிரம்மாண்டமான போர்ப்படை , இந்த உலகை மாற்றி விடுவதற்கான ஆற்றல் கொண்ட உத்வேகம் , யாவும் இருந்தும்கூட அவன் ஹெலஸ்பாண்ட் என்ற கால்வாயை கடக்காமல் தனது பயணத்தை நிறுத்தி இருப்பார் என்பது யூகிக்கத் தக்கது . அது அவனுடைய பயத்தினால் அல்ல, திடமற்ற முடிவினால் அல்ல, பலவீனத்தினாலும் அல்ல ஆனால் அவனுடைய சோர்ந்த கால்களினால் கூட இருக்கலாம் .” என் எண்ணம் : தீமைக்கான விலையை நாம் அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருக்க முடியாது என்று சொல்லும்போது பாவத்தின் சம்பளம் மரணம் என்கிற பைபிள் சொற்றொடர் நினைவுக்கு வருகிறது . அப்படி என்றால் தீமைக்காண விலை என்பது மொத்தமாக நாம் கொடுக்கப் போகிற மரணம் என்று பொருள்படுகிறது . ஒவ்வொரு தீமைக்கும் அவ்வப்போது விலைகொடுத்து நாம் அதை சரி செய்துவிட முடியாது , முதலிலேயே மொத்தமாக கொடுப்போம் என்று காஃப்கா சொல்கிறார் . அதாவது ஒருவன் தீமையின் பயனால் தொடர்ந்து மூழ