காஃப்கா நுண்மொழி-20
காஃப்கா நுண்மொழி-20 ஆலயங்களின் பலிபீடத்திலிருக்கிற குடுவைகளில் உள்ள படையலை குடித்து தீர்க்கின்றன அத்து மீறும் சில சிறுத்தைகள். இவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து நிகழ்கின்றன. பின்னாள் இவையும் கணக்கில் கொள்ளப்பட்டு, பிறகு அதுவும் ஒரு சடங்கின் பகுதியாகிறது. என் எண்ணம்: இந்த நுண்மொழியை படிக்கும் போது, நமக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருக்கிற ஜென் கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு ஜென் துறவியும் அவரது சிஷ்யர்களும் தியானம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு பூனை சத்தம் போட்டுக்கொண்டே குறுக்கும் நெடுக்கும் அலைந்ததால், தியானத்திற்கு இடையூறாய் இருப்பதாய் கருதி அந்த துறவி ”பூனையைக் கட்டிப்போடுங்கள்” என்று உத்தரவிட்டார். சில ஆண்டுகள் கழித்து அந்த துறவி இறந்து விட்டார். ஆனாலும் அந்த பூனையைக் கட்டிப் போடும் பழக்கம் தொடர்ந்து கொண்டிருந் தது . மேலும் சில வருடங்கள் கடந்தன. அந்த பூனையும் இறந்து விட்டது. வேறொரு பூனை வரவழைக்கப்பட்டு கட்டி வைக்கப் பட்டது. பல ஆண்டுகள் கழித்து சீடர்கள் ,” நம் மத வழக்கப்படி பூனையை தியான நேரத்தில் கட்டி வைக்க வேண்டும்” என நூற்குறிப்புகள் எழுதி வைத்தன ர். இந்த நுண்ம
கருத்துகள்
கருத்துரையிடுக